| படம்: சுதை வடிவில் பழைய மூலவர் |
| படம்:ஸ்ரீ காளியம்மன் |
| படம்: ராஜகோபுரம் |
ஸ்ரீ காளியம்மன் கோயில்
நமது நாட்டில் அம்மனுக்கு என்று பல கோவில்கள் உன்டு. நமது தேசமே தாய் தேசம் தானே. அப்படிப்பட்ட பல சக்தி தளங்களுக்குள் ஒன்றுதான் நாச்சியார்புரம் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில். இது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா நாச்சியார்புரம் கிராமத்திலுள்ளது.
சிறப்பம்சம்
தேனி மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய ராஜ கோபுரம் கொண்ட அம்மன் கோவில். கருவறையில் மிகப்பெரிய கற்சிலையில் மூலவர் ஆக கையில் சூலம் தாங்கி அசுர வத கோலத்துடன் சாந்த சொரூபினியாக ஸ்ரீ காளியம்மன் வீற்றிருக்கிரார். அர்த்த மண்டபத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இரு துவாரபாலகிகள் நம்மை வரவேற்ப்பது போல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள் அருகில் சுதை வடிவில் காமட்சியம்மனும், மஹா மண்டபத்தில் பலங்கால சுதை வடிவ மூலவரான காளியம்மன் புதுப்பிக்கப்பட்டு அமர்த்தப்பட்டு உள்ளது. மேலும் வினாயகர், பாலமுருகன் சிலைகளும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.
திருவிழா
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 20 ஆம் தேதிக்குப்பிறகு வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அம்மனுக்கு திருவிழா நடத்தப்படுகிறது. அதுசமயம் சுற்று வட்டார பகுதி மக்கள் அணைவரும் வேலை, தொழில் காரணமாக வெளியூரில் இருப்பவர்களும் அன்றைய தினம் ஊருக்கு வந்துவிடுகிறார்கள்.
அம்மனுக்கு நேர்த்திக்கடனாக மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், ஆடு, கோழி பலி கொடுத்தல், கரகம், முளைப்பாரி(7 நாட்களில் சூரிய ஒளி படாமல் பயறு செடி சுமார் இரண்டு அடி வளரும்) எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், முதலிய வைபவங்கள் நடைபெறும். சிறப்புஅம்சமாக குழந்தைகளுக்கு நேர்த்திக்கடனாக கவுறு குத்து என்ற நிகழ்ச்சி நடைபெறுவது வேறு எங்கும் கானமுடியாததாகும்.
அமைவிடம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து ஜம்புலிபுத்தூர் வழியாக ரெங்கசமுத்திரம் வந்து நாச்சியார்புரம் செல்லலாம்.(3KM). தேனி To ஆண்டிபட்டி சாலையில் ரெங்கநாதபுரம் வழியாக நாச்சியார்புரம் செல்லலாம்.(12KM).பெரியகுளத்திலிருந்து வைகை அணை வழியாக நாச்சியார்புரம் செல்லலாம்(12KM) நாமும் ஒரு முறை சென்று தரிசிப்போமா..........
வணக்கத்துடன் ....S .நாகராஜன்
No comments:
Post a Comment